ரயில் நிலையத்தில் ஒரு கப் டீக்கு ரூ. 50 சர்வீஸ் சார்ஜ் – பயணிகள் அதிர்ச்சி!

0
ரயில் நிலையத்தில் ஒரு கப் டீக்கு ரூ. 50 சர்வீஸ் சார்ஜ் - பயணிகள் அதிர்ச்சி!
ரயில் நிலையத்தில் ஒரு கப் டீக்கு ரூ. 50 சர்வீஸ் சார்ஜ் - பயணிகள் அதிர்ச்சி!
ரயில் நிலையத்தில் ஒரு கப் டீக்கு ரூ. 50 சர்வீஸ் சார்ஜ் – பயணிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் குடித்த ஒரு கப் டீக்கு சர்வீஸ் சார்ஜ் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தி சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது.

சர்வீஸ் சார்ஜ்:

இந்தியாவில் கடந்த ஜூன் 28ம் தேதி டெல்லி மற்றும் போபால் இடையே இயங்கும் போபால் சதாப்தி ரயிலில் பயணம் செய்த ரயில் பயணி ஒருவர் காலை நேரத்தில் ஒரு கப் டீ வாங்கி குடித்துள்ளார். அந்த டீக்கு ரூபாய் 70 வசூல் செய்துள்ளனர். இந்த பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி என்னவென்று கேட்ட போது டீயின் விலை ரூ. 20 அதற்கான சர்வீஸ் சார்ஜ் ரூ. 50 என்று விளக்கம் அளித்துள்ளனர். அவருக்கு அளித்த பில்லில் ஒரு டீயின் விலை ரூ.20 அதற்கான ஜிஎஸ்டி ரூ.50 ஆக மொத்தம் ஒரு டீயின் விலை ரூ 70 என பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் இது பகல் கொள்ளையாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இதனை பார்த்து பலரும் விலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் டீயை செய்ய 50 ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம் என்று கூறுகின்றனர். இது குறித்து விளக்கமளித்த ரயில்வே அதிகாரி ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் பயணிகளின் டிக்கெட் உடன் சேர்த்து, உணவையும் பயணிகள் புக் செய்யலாம். கடந்த 2018ம் ஆண்டு டிக்கெட் புக் செய்யும் போது, உணவு கண்டிப்பாக அத்துடன் இணைத்து வழங்கப்பட்டு வந்தது. இந்த முறைக்கு பயணிகள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் இது ரத்து செய்யப்பட்டு தற்போது தேவைப்பட்டால் மட்டுமே உணவை புக் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடைகள் மூடப்படும் அவலம் – உணவு தட்டுப்பாடு எதிரொலி!

இந்த நிலையில் டிக்கெட் புக் செய்யும் போது உணவை புக் செய்யாதவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தின் போது உணவு வேண்டும் என்று நினைத்தால் ரூபாய் 50 சர்வீஸ் சார்ஜாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண டீயாக இருந்தாலும் சரி, முழு உணவாக இருந்தாலும் சரி அதே சர்வீஸ் சார்ஜ் தான் என்று கூறியுள்ளார். தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு கப் தேநீருக்கு இவ்வளவு தொகை வசூலிப்பது பயணிகளை சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் ரயிலில் பயணம் செய்வதையே தவிர்த்து விடுவார்கள். ஏற்கனவே ரயில் நிலையங்களில் உணவு பொருட்களின் விலை கூடுதலாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!