தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் நியமனம்
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதாவது, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா தொடர்ந்த வழக்கில், ‘தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் தகுதி பெறவில்லை.
Exams Daily Mobile App Downloadb
இதற்கிடையில் கடந்த ஜூன் 23ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள நடுநிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
தமிழக அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.63,200/- வரை மாத ஊதியம்..!
தவிர, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவயானவர்களை ஆசிரியர்களாக பணியமர்த்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இந்த அறிவிப்பை செயற்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மனுதாரரின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ரமேஷ், இது குறித்து அரசு தரப்பு விளக்கத்தை கேட்கும் போது அதில் கிடைத்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் தற்காலிக ஆசிரியர்களை நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.