உலகில் 65.61 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வரும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62.66 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸின் தாக்கம் பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் ஏராளமானோர் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடியது.
அதனை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசியுடன் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தற்போது 228 நாடுகள் கொரோனா தாக்கத்தின் காரணமாக பெரும் பாதிப்பை அடைந்த்துள்ளன. கொரோனா வைரஸ் ஆனது உருமாறி பரவி வருவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போதைய கணக்கெடுப்பின்படி கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகமெங்கும் 65.61 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 626,671,750 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 606,326,872 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 38,650 பேர் மோசமான நிலையில் மருத்துவனமயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்