தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பற்றிய முக்கிய அறிவிப்பு – அக். 15ல் இலக்கிய திறனறி தேர்வு!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது பற்றிய அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன.
அக். 15 ல் இலக்கிய திறனறி தேர்வு:
2022-23-ம் கல்வியாண்டு முதல் தமிழக அரசு, மாணவர்களுக்காக தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பாக மாதம் ரூ. 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வானது அக். 15 ல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 10ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற உள்ளதாகவும், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. தேர்வு காலை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது.
NEET UG கவுன்சிலிங் 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்களுக்கு அரசு பள்ளிகளின் வழியே வழங்க முடிவு செய்துள்ளது. தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு மையத்தை விட்டு வெளியேற மாணவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு கணினி வழியில் திருத்தும் வகையில், ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வில் மாணவர்கள் சரியான விடைகளை கருப்பு நிற பந்துமுனை பேனாவால் நிழற்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்