தமிழகத்தில் போராட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ் – சம்பள பிடித்தம்! அரசின் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
உண்ணாவிரத போராட்டம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இதற்கு முன்னர் பலமுறை கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். தற்போது இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
Join Our WhatsApp Group” for Latest Updates
இந்த போராட்டத்தில் பலரும் மயக்கம் அடைந்துள்ள நிலையில் போராட்டம் தற்போது வரை நீடித்து வருகிறது. மயக்கம் அடைந்துள்ள 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் சமரசம் எட்டாத நிலையில் மேலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் இருந்து ஆசிரியர்கள் உடனடியாக போராட்டத்தை நிறுத்திவிட்டு மீண்டும் தங்கள் பணிகளை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.50,000 வரை முன்பணம் – வந்தாச்சு புதிய சலுகை… இப்போதே அப்ளை பண்ணுங்க!
இந்நிலையில் தற்போது பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்து வரும் நிலையில் போராட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.