இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 4,369 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,04,949 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து புதிதாக 20 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதில் கேரளாவில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,28,185 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தற்போது 12 வயத்திற்குட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
TNEA Counselling 2022: பொறியியல் அட்மிஷன் ரவுண்ட் 1 முடிவுகள் வெளியீடு!
Exams Daily Mobile App Download
அனைத்து மாநிலங்களில் ஆங்காங்கே தடுப்பூசி மையங்கள் மற்றும் முகாம்கள் அமைக்கப்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் 3ம் தவணை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த நாட்களில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டதன் காரணமாகவே தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது, என்றாலும் மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்