திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் புதுச்சேரியிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது
50 சதவீத இருக்கைகள்:
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அதன்படி புதுச்சேரியில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இரவு 8 மணி வரை மட்டுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்டோ, வாடகை கார்களில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பேருந்து பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் – கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க முடிவு!!
குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரியில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை விட குறைவாக காணப்படுவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்