தமிழகத்தில் பேருந்து பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் – கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க முடிவு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் கூடுதலாக 400 மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் கூடுதலாக 400 மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து மாநகர போக்குவரத்து கழக இணை இயக்குநர் அளித்துள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கோவிட் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படுகின்ற பேருந்துகளில் 44 இருக்கைகள் உள்ளது. மேலும் பேருந்துகளில் 25 பேர் நின்று கொண்டு பயணிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம் – பள்ளிக் கல்வித்துறை செயலர் வலியுறுத்தல்!!
அதனால் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ளும் விதத்தில் நாளை ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 300 முதல் 400 வரை கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களாகிய செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், மணலி, கண்ணகி நகர், பெரம்பூர், ஆவடி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், திருவொற்றியூர்,அம்பத்தூர் மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்