தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம் – பள்ளிக் கல்வித்துறை செயலர் வலியுறுத்தல்!!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கி 21 ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது. முன்னதாக பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நடத்தப்படும் செய்முறைத்தேர்வுகள் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறை முடிந்து நேற்று (08-04-2021) பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார் முதன்மை கல்வி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
டிப்ளமோ படிப்புகளில் 98.5% மாணவர்கள் தோல்வி – பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!!
பொதுத்தேர்வுக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ‘அரசின் அறிவுறுத்தல்களுடன், அந்தந்த மாவட்ட சூழலுக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தவும், தேர்வு மையங்களை அமைத்தல், தேர்வு கட்டுப்பாட்டு மையங்களுக்கு விடைத்தாள்களை அனுப்புதல், தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளை விரைந்து செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்