டிப்ளமோ படிப்புகளில் 98.5% மாணவர்கள் தோல்வி – பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு!!
தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புகளுக்கான தேர்வுகளில் 98.5 சதவீதம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். எனவே இதற்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என கோரிய மனுவுக்கு பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் 98 சதவீத மாணவர்கள் தோல்வியடைந்த காரணத்தால் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி திருநெல்வேலியை சேர்ந்த மீனாட்சி சுந்தரி என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘நான் இரண்டாம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டய படிப்பு படித்து வருகிறேன். இப்படிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் 220 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் 160 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் மாணவர்கள் சரியாக வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களால் சரியாக தேர்வுகளை எழுத முடியாமல் போனது. சமீபத்தில் வெளியான தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான தேர்வு முடிவில் 98.5% மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
நாட்டா நுழைவுத்தேர்வு நாளை முதல் துவக்கம் !
அதனால் தொடக்கக்கல்வி பட்டய படிப்பு மாணவர்களுக்கு இணைய வழியாகவோ, மறுதேர்வோ நடத்தப்பட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மாநில கவுன்சில் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு மறுவிசாரணை ஏப்ரல் 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்