ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 21 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு – அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இன்னும் வைரஸின் தாக்கம் குறையாததினால் ஊரடங்கு அமலில் தான் உள்ளது. பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டாலும் பள்ளிகளோ அல்லது கல்லூரிகளோ இன்னும் திறக்கப்படவில்லை.
4 ஆம் கட்ட ஊரடங்கு :
மத்திய அரசின் 4 ஆம் கட்ட ஊரடங்கின் தளர்வு வழிமுறைகளில் [பள்ளிகளை மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் அதனை செயல்படுத்த மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் ஆந்திர மாநில அரசு பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளித்து தற்போது ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
மாநில அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு :
- வரும் 21 ஆம் தேதி முதல் 9, 10 மற்றும் இன்டர்மீடியட் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது அனுமதிக்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்.
- பிஜி மற்றும் பிஹெச்டி மாணவர்களுக்கும் வரும் 21 ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- சமூக, கல்வி, மத, விளையாட்டு மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு 100 பேர் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 21 ஆம் தேதி முதல் திறந்த வெளி திரையரங்குகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் ஆந்திர மாநில அரேசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்