பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!

0
பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு - இலங்கை அரசு அறிவிப்பு!!
பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு - இலங்கை அரசு அறிவிப்பு!!
பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!

இலங்கையில் தரம் ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை, மேலும் ஆரம்ப பாடசாலைகள் ஜனவரி 11 முதல் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது அதை ஒத்திவைத்து அடுத்த மாதத்திற்கு மேல் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று இலங்கை பள்ளிகல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக இலங்கையில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. கடந்த ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து தொற்று இல்லாததால் இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிறகு மீண்டும் தொற்று அதிகரிப்பதன் காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில், சமூகத் தொற்று ஏற்படாத நிலையில், புதிய தொற்று எதுவும் கண்டறியப்படாத சூழலில் ஜூலை மாதத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு 6 முதல் 13 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இதன்படி தரம் 1 முதல் 5 வகுப்பு மற்றும் ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற ஜனவரி 11 முதல் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது இலங்கையில் உருமாறிய கொரோனா பரவி வருவதால் அந்த அறிவிப்பை ஒத்தி வைப்பதாக இலங்கை கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த பயணிகளுக்கு மரபணு மாற்றம் அடைந்த கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். எனவே மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளை தவிர ஏனைய பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் தரம் ஒன்று முதல் 5 வகுப்பு மற்றும் ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புகள் திறப்பது குறித்து அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித்துறை செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!