50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0
50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகிற மே மாதம் இறுதி வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிக்காக 50 வயதிற்கு மேல் உள்ள அரசு ஆசிரியர்களை பணியில் அமர்த்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பணிகள்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. மிக முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இல்லாமல் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு!!

தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுவாக தேர்தல் பணிகளில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிப்பது வழக்கம். இதனடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை அந்ததந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட முதன்மை அலுவலரிடம் அனுப்ப வேண்டும்.

ஜனவரி 11 முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!!

இதுதவிர ஏற்கனவே பட்டியல் தயாரித்து அனுப்பியவர்கள் அதில் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும். கொரோனா காரணமாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை தேர்தல் பணிக்கான பட்டியலில் சேர்க்கக்கூடாது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் புகைப்படம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். சில மருத்துவ காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்கு விலகல் அளிக்க கூடாது. அவ்வாறு விலகல் தேவைபட்டால் உரிய சான்று அளிக்க வேண்டும். இவ்வாறு இறுதி பட்டியலை விரைவில் மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!