9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு!!
கொரோனா ஊரடங்கிற்கு பின் புதுச்சேரியில் இன்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சில வழிமுறைகளை கடைபிடிக்க புதுச்சேரி கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது அரசு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டன.
ஜனவரி 11 முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!!
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்பில், “புதுச்சேரியில் இன்று முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளியில் வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம். மாணவர்கள் வரும்போது கட்டாயம் பெற்றோர்களிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும்.
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- இன்று முதல் தொடக்கம்!!
மேலும் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற விதிகளை பின்பற்றி பள்ளிக்கு வர வேண்டும். மேலும் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கனவே 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3 மாதமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்