தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் திடீர் விளக்கம்!

0
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் திடீர் விளக்கம்!
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் திடீர் விளக்கம்!
தமிழகத்தில் ஜனவரி 31க்கு பிறகு பள்ளிகள் திறப்பு? அமைச்சர் திடீர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவலால் மாணவர்கள் மனதளவில் பாதிப்படைய கூடாது என்பதற்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வியானது எட்டாக்கனியாக இருந்தது. அவர்களால் இணைய வசதி மற்றும் ஸ்மார்ட்போன்களை வாங்கி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. எனவே இவர்களின் நிலையை உணர்ந்து கடந்த திமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்தந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கால அட்டவணை படி பாடங்களை நடத்தி வந்தனர்.

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பிற வகுப்பு மாணவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று கருத்துகள் எழுந்த நிலையில் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் கொரோனா தொற்றால் மாணவர்கள் மனதளவில் பாதிப்படைய கூடாது என்பதற்கான ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 50% பேர் மட்டுமே அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 31ம் தேதிக்கு பிறகு நோய் பரவல் சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். பொதுத்தேர்வு என்பது மிக மிக முக்கியமான தேர்வு. அதனை கவனத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் தான் உங்களுடைய இரண்டாவது பெற்றோர். ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவ – மாணவிகள் தவறாக எண்ணக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!