இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், 9 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க பல்வேறு மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன. தொற்றுநோயை மனதில் கொண்டு, பள்ளிகளையும் கல்வி நிறுவனங்களையும் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளது.
குஜராத்
ஜனவரி 11, புதன்கிழமை முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்லூரிகளையும் பள்ளிகளையும் மீண்டும் திறப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்று வர வேண்டும்.
தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நர்சிங் கல்லூரிகள் 2021 ஜனவரி 11 முதல் மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா
2021 ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்படும் என்று அம்மாநில அமைச்சர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் சில பகுதிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
டெல்லி
கொரோனா தொற்றுநோயின் தீவிரம் காரணமாக, தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் வரை பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகா
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வழக்கமான நேரடி கல்லூரிகள் ஜனவரி 14 முதல் மீண்டும் தொடங்கும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்