பிற மொழி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பு – தமிழக அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், வேற்று மொழி மாணவர்களுக்கும் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறைக்கப்பட்ட பாடங்கள்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா காலம் என்பதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டன. இந்நிலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் உள்ள 40% பாடங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பிரஞ்சு என பிற மொழி வாயிலாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு குறைக்கபட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் ‘யுஜிசி நெட்’ தேர்வுகள் – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
இது குறித்து தமிழக பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது,”தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் வேறு மொழிகளில் பயின்று வருகிறார்கள். இவர்களும் குறைந்த காலத்தில் இந்த பாடங்களை பயிலுவது கடினம். எனவே அரசு அவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் நடப்பு ஆண்டுக்கான புத்தகத்தையும் வழங்க வேண்டும்’, என கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்