தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி முக்கிய முடிவு !

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி முக்கிய முடிவு !
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி முக்கிய முடிவு !

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி முக்கிய முடிவு !

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் கொரானா பரவியதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி திறப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசியரிடம் கருத்து கேட்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி தலைமை ஆசியர் கூட்டம்

அனைத்து பள்ளிகளிலும் நவம்பர் 9ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும், கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!