அரசின் அறிவிப்பை மீறி இன்று பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய நடவடிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அரசின் அறிவிப்பையும் மீறி சில பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஜூன் 7 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளி கல்வித்துறையின் இந்த அறிவிப்பினையும் மீறி இன்று தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திடீரென சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் திறந்திருக்கலாம். ஆனால், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் இன்று திறந்திருக்கக் கூடாது எனவும், அரசின் இந்த அறிவிப்பையும் மீறி பள்ளிகள் திறந்து இருந்தால் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், எந்தெந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் திறந்திருக்கிறது என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டவாரியாக விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.