டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!
சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று சண்டிகர் பள்ளிகளில் குளிர்கால விடுமுறையை மாற்றுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னதாக டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 வரை இருந்த குளிர்கால விடுமுறையை தற்போது டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை கல்வித்துறை நீட்டித்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் பாதிப்புகள் குறைந்த பிறகு நிலைமைக்கு ஏற்றவாறு பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள்முடிவு செய்தது. அதன்படி, தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படலாம் என்பதால் பள்ளிகள் திறப்பதில் அனைத்து அரசுகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தது. தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் இரண்டு தனியார் பள்ளிகளின் இரண்டு மாணவர்களுக்கு கோவிட் பாசிட்டிவ் சோதனை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் டிச.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதனால் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் வழிகாட்டு நெறிமுறையின்படி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் , சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். தற்போதைய நிலவரப்படி சண்டிகரில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகளுக்களை மாணவர்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும், தற்போது கோவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறையை முன்னதாக டிசம்பர் 27 முதல் ஜனவரி 5 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
Post Office இல் ரூ.1500 முதலீடு செய்தால் 4.5 லட்சம் வரை ரிட்டன்ஸ் – மாதாந்திர வருமான திட்டம்!
ஆனால் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் மாவட்டக் கல்வி அலுவலகம், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் சண்டிகர் பள்ளிகளில் குளிர்கால விடுமுறையை மாற்றுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 குளிர்கால விடுமுறையை யூடி கல்வித் துறை நீட்டித்துள்ளது. மேலும், ஜனவரி 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால், ஜனவரி 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மேலும், திட்டமிட்ட அட்டவணை படி தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களும் தங்கள் பணியை தொடர்வார்கள். தனியார் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் இந்த வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.