ஜன.20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசின் புதிய உத்தரவு!!

0
ஜன.20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசின் புதிய உத்தரவு!!

கடும் குளிர் மற்றும் பனி காரணமாக ஆக்ராவில் உள்ள பள்ளிகளை ஜன.20 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறை:

வட இந்திய மாநிலங்களில் கடும் குளிர் அலை வீசி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ, பல்லியா, கவுதம் புத்த நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.13 வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!!

இந்நிலையில், விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பனியின் காரணமாக கூடுதலாக விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக ஆக்ராவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜனவரி 20 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலை 11 மணி முதல் மாலை 3:30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!