தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியரின் உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் அந்தமான் கடல் மற்றும் வங்க கடல் பகுதிகளில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இது தெற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த சில நாட்களில் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TNPSC தமிழ் தாளில் எளிமையாக தேர்ச்சி – இதை படிச்சா போதும்!!!
அதன்படி செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் ஆனது அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் நாளை ( 25. 11 .2023 )செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவித்துள்ளது. குறிப்பாக எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.