பள்ளி கல்லூரிகள் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை திறப்பில்லை
இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் 16 முதல் பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்வேறு தேர்வுகள் தள்ளிவைக்கப்படும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றது.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், அடுத்த கல்வியாண்டு ஆனது திறக்கப்படாமல் இருப்பது இன்னும் மாணவர்களினை பாதிக்கிறது.
இருப்பினும் தற்போது மத்திய மனிதவள அமைச்சகத்தின் மூலமாக ஒரு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அதில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய மனிதவள அமைச்சகத்தின் செயலாளர் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சகத்திற்கும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
அதில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை எந்த ஒரு கல்வி நிறுவனங்களையும் திறக்க வேண்டாம் எனவும் தேவையுள்ள நிறுவனங்கள் மட்டும் குறைந்த ஊழியர்களுடன் பணிபுரியலாம் எனவும் உத்தரவு விடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |