தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!
திருச்சி மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பங்கேற்றார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியானது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பங்கேற்ற திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனது தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயின்று முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி வாட்ச், பேக், ஆடைகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார். இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.