கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 5000 வழங்கும் திட்டம் – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! முழு விவரம்!
மத்திய அரசு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலமாக கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ரூ.5000 வழங்குகிறது. இது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
மத்திய அரசு திட்டம்
மத்திய மாநில அரசுகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலமாக கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 5000 வழங்குகிறது. இந்த தொகையை ஆண்டும், கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்கிறது. மேலும் இந்த தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!
அந்த வகையில் கர்ப்பத்தைப் பதிவு செய்யும் போது முதல் தவணையாக 1000 ரூபாய் வழங்கப்படும். அதன் பின் இரண்டாவது தவணை ஆறு மாத கர்ப்பத்திற்கு பின் குறைந்தபட்சம் ஒரு கர்ப்பகால பரிசோதனைக்குப் பிறகு ரூ.2000 வழங்கப்படும். பின் குழந்தை பிறந்ததை பதிவு செய்த பின் மூன்றாவது தவணை ரூ. 1000 வழங்கப்படுகிறது.
இந்த தொகை தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அல்லது பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களுடனும் தொடர்புடைய பெண்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகாது.
Exams Daily Mobile App Download