SBI கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – இனி இதற்கெல்லாம் கேஷ்பேக் கிடையாது!
நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான SBIல் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் மே 1 ஆம் தேதி முதல் சில கேஷ்பேக் நன்மைகளில் மாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கேஷ்பேக் நன்மை
SBI வங்கி ஒரு நம்பகமான வங்கியாக இருப்பதால் அதில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக SBI வங்கி பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன் படி புதிதாக வெளியான அறிக்கையின் படி எஸ்பிஐ கார்டு மூலம் கிடைக்கும் சில சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி கிரெடிட் கார்டு நிறுவனம், நகைகளுக்கும் , பள்ளி மற்றும் கல்வி சேவைகள், வீட்டு பயன்பாடுகள், காப்பீட்டு சேவை அட்டைகள், பரிசுகள், உறுப்பினர் நிதி நிறுவனங்கள் மற்றும் இரயில் டிக்கெட்டுகள் போன்றவற்றிற்கு இனி மே 1 ஆம் தேதி முதல் கேஷ்பேக் கிடையாது என தெரிவித்துள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பிலான முதல்வரின் இலவச காப்பீடு திட்ட அட்டையை பெற வேண்டுமா? – என்ன செய்யலாம்!
மேலும் SBI கார்டுகள் நாடு முழுவதும் உள்ள 21 விமான நிலையங்களில் 42 ஓய்வறைகளுடன் ஒப்பந்தங்களை கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே SBI கார்டுகளில் பேமெண்ட் சேவைகள் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் வாடகைப் பணம் செலுத்துவதற்கான செயலாக்கச் செலவு 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download