Post Office இல் 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் பல வங்கிகளில் சேமிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாத பலர் அஞ்சல் துறைகளில் உள்ள திட்டங்களை தான் அதிகம் நாடி செல்கின்றனர். அந்த வகையில் அஞ்சல் துறையில் உள்ள மாத வருமான திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு பல சேமிப்பு திட்டங்களை வழங்கி உள்ளது. பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சேமிப்பு திட்டங்கள் பல இருக்கின்றனர். ஆனால் தனியார் வங்கிகளை நம்பி சேமிப்பு திட்டங்கள் தொடங்க மக்கள் பலர் தயங்குகின்றனர். இந்நிலையில் குறைந்த ஆபத்து கொண்ட அஞ்சல் துறை சேமிப்பு திட்டங்களில் சேர மக்கள் பலர் விருப்படுகின்றனர். அதற்கு தகுந்தாற் போல பல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது.
தமிழகத்தில் மார்ச் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில் அந்த திட்டங்களில் மாத வருமானத் திட்டம் நல்ல திட்டமாக இருக்கிறது. மாத வருமான திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். உங்கள் குழந்தைகளின் பெயரில் இந்த சேமிப்புக் கணக்கை தொடங்கினால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்குக் கிடைக்கும் வட்டியை வைத்து குழந்தையின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த உதவியாக இருக்கும். இந்த திட்டத்தை நீங்கள் உங்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் நேரில் சென்று தொடங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். தற்போது வட்டி விகிதம் 6.6 சதவீதமாக உள்ளது. இந்த திட்டத்தின் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும். 10 வயதுக்கு குறைவான குழந்தைக்கும் கணக்கு தொடங்க முடியும். குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் கணக்கு தொடங்கலாம். உங்களுடைய குழந்தைக்கு 10 வயதாக இருந்து, ரூ.2 லட்சத்தை அவர் பெயரில் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டி மட்டும் ரூ.1100 கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில், இந்த வட்டி மொத்தமாக 66,000 ரூபாயாக மாறும்.
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 – வைரலாகும் ப்ரோமோ!
கடைசியாக உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் திரும்பக் கிடைக்கும். அதன் மூலம் குழந்தையின் கல்விக்கு இந்த பணம் உதவியாக இருக்கும். இந்த சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,925 கிடைக்கும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இது பெரிய தொகைதான். இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் அதிகபட்ச வரம்பான 4.5 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.2,475 உங்களுக்குக் கிடைக்கும்.