தமிழகத்தில் இந்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டணம் – உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கல்லூரி கட்டணம்
தமிழகத்தில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலமேடு மற்றும் மின்வாரிய குடியிருப்பு காலனி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்மொடி ஆய்வு செய்தார். இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிக்கும் உட்பட்ட பகுதிகளிலும் உயர்நுட்ப வசதிகளோடு பாதாள சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் ஒவ்வொரு விதமாக பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கையை அடுத்து தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்லூரிகளிலும் ஒரே வகையான கட்டணங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.