சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 16 ல் நடை திறப்பு!
கேரளாவில் உள்ள சபரிமலையில் வரும் 16ம் தேதி முதல் நடை திறக்கப்படவுள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று மற்றும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை நடை திறப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. தொற்று பரவல் தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் என அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் பிறகு மாநிலங்கள் தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
BSNL குறைந்த விலையில் அதிரடி சலுகை – புதிய அறிமுகம்!
இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. எனவே மக்களின் பொருளாதார நலன் கருதி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் உள்ள சபரிமலையில் நடை திறக்கப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெகு நாட்களாக சபரிமலையில் நடை மூடப்பட்டிருந்தது. பிறகு வழக்கமான பூஜைகளுக்காக பக்தர்களுக்கு தடை விதித்து நடை திறக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வருவதால் வரும் 16 ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. ஆடி மாத பூஜைக்காக வருகிற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
சபரி மலைக்கு வர விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று மற்றும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனவும், இவை சரியாக இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.