மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் – தமிழக அரசு அதிரடி!

0
மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் - தமிழக அரசு அதிரடி!
மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் - தமிழக அரசு அதிரடி!
மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் – தமிழக அரசு அதிரடி!

மின்வேலியில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுப்பதற்காக மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மின்வேலி

தமிழகத்தில் உயர் மின்னழுத்த மின்வேலிகளால் மின்சாரம் தாக்கி கடந்த சில நாட்களாக அதிக அளவிலான வனவிலங்குகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு வனவிலங்குகளை பாதுகாப்பதில் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு மின்வேலி அமைப்பதற்கான விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, உயிர் மின்னழுத்த மின்வேலிகளுக்கு பதிலாக சூரிய சக்தி மின்வேலிகளை பயன்படுத்தலாம் எனவும், விவசாய நிலங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், சூரிய சக்தி மின்வேலி அமைப்பதற்கு முன்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை – இன்று (ஜூலை 5) முதல் விண்ணப்பிக்கலாம்!

மேலும், காப்புக்காட்டின் வனப்பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஏற்கனவே மின்வேலி அமைத்திருக்கும் விவசாயிகள் கட்டாயமாக மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மின்வேலி அமைத்தவர்கள் இந்த விதி அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் மின்வேலி அமைத்ததற்கான பதிவு சான்றுகளை மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை மின்வேலியின் தரம் மதிப்பு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!