பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் உதவித்தொகை – இந்திய ராணுவத்தின் புதிய திட்டம்!
இந்திய ராணுவம் பிற்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு தலா ரூபாய் 1.2 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.
உதவித்தொகை:
இந்திய ராணுவம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக சிறப்பு உதவி திட்டம் 2023 தொடங்கியுள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் பேசி உள்ளனர். அப்போது ராணுவத்தின் சத்பவனா நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்ட பள்ளத்தாக்கின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 146 மாணவர்களுக்கு தலா ரூபாய் 1.2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான கல்விக்கான செலவின் மீதி தொகையை அந்தந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும்.
ரேஷன் கடைகளுக்கு KYC இல்லை – குடிமைப் பொருள் வழங்கல் துறை தகவல்!
12 இணைந்த பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர்வார்கள். இந்த உதவி தொகை திட்டத்திற்காக குப்வாரா மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், 34 மாணவர்கள் மட்டுமே எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் தங்கிய மாணவர்கள் தங்களின் இலக்கை அடைவதற்கான இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.