
“கனிமங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது”.. பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட சிறப்பு தகவல்..
2025 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மார்ச் 15 ஆம் தேதி முதல் பல்வேறு துறை சார்ந்த பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று (24-03-2025) நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்கூட்டத்தொடர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் “தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த நிதியாண்டை விட ரூ.16 கோடி அதிக லாபம் அளித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும், சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்”.























