ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறவிடீர்களா? உங்களுக்கான வாய்ப்பு!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக ஆக.19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முகாம் முழுமையடைகிறது.
இந்நிலையில், விண்ணப்பங்களை தற்போது வரையிலும் பூர்த்தி செய்யாமல் இருக்கும் குடும்ப தலைவிகளுக்காக சிறப்பு முகாம் ஆகஸ்ட் 19 மற்றும் 20ம் தேதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
எனவே, முகாமில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய தவறியவர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி ரூ. 1000 உரிமை தொகையை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் தமிழக அரசின் சார்பில் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மேல் முறையீடு செய்யவும் குடும்ப தலைவிகளுக்கு உரிமை உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.