நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூருவை ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
முதல் இடத்தில் ராஜஸ்தான்:
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நடப்பு சீசனில் பவர் பிளே ஓவரில் பெங்களூர் அணி எந்த ஒரு விக்கெட்டையும் இழக்கவில்லை என்பது இதுவே முதல் முறை. 184 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி அளித்தது.
AIIMS நிறுவனத்தில் மாதம் ரூ.2,08,700/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே…!
தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது பந்திலே ஆட்டம் இழந்தார். அதன்பின் களம் இறங்கிய ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடினர். நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை மிஸ் செய்ததுடன், ரன் அவுட் வாய்ப்புகளையும் தவறவிட்டது. இறுதியில் ராஜஸ்தான் அணி ஓவர்களில் 4விக்கெட்டினை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 100 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்சனின் தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.