இங்கிலாந்து டெஸ்ட் மேட்சில் ரோஹித் சர்மா கேப்டனா…? வெளியான முக்கிய அப்டேட்…!!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவின் செயல்பாடு கேப்டனாக மட்டுமல்ல வீரராகவும் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. மேலும், சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியில் இருந்து விலகி, அணியை வழிநடத்தும் வாய்ப்பை பும்ராவிடம் வழங்கியதால் ரோகித் சர்மா கடும் விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில் அடுத்து வரவிருக்கும் டெஸ்ட் தொடர் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஜூன் மாதம் நடக்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது அனைவரது கவனமும் IPL போட்டிகள் மீதுள்ள நிலையில், மே மாதம் இறுதி வாரத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் குறித்து BCCI தேர்வுக் குழு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது”.


























