நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி.. மத்திய அரசின் கட்டுப்பாடு நடவடிக்கை!
இந்தியாவில் அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
விலைவாசி உயர்வு:
கடந்த ஆறு மாத காலங்களாக நாட்டில் திடீரென்று உணவுப் பொருட்களின் விலை ஆனது பல மடங்கு உயரத்தை தொட்டுள்ளது. இதனை கட்டுக்குள் வைப்பதற்காக அரிசி, வெங்காயம், கோதுமை போன்ற பொருட்களுக்கான ஏற்றுமதியை அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் நாட்டின் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
TNPSC குரூப் 2 தேர்வுக்கு தயாராவது எப்படி? – எளிய வழிமுறைகள்!
தற்போது பணவீக்க குறியீடு ஆனது ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைய தொடங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 140 விலை கண்காணிப்பு மையங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் மலிவு விலையில் பருப்பு, கோதுமை போன்றவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.