IPL Mega Auction 2025: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்.. இத்தனை கோடிகளா??
2025 ஐபிஎல் போட்டிக்கான ஏலம், சவூதி அரேபியாவின் ரியாத்தில் இன்றும், நாளையும் நடைபெறும். இதற்கான ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் உள்ளனர். அவர்களில் 367 பேர் இந்திய வீரர்கள், 210 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. இதன் மூலம் இதுவரை நடைபெற்ற IPL ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஏலத்தில் முதல் செட்:
ரிஷப் பந்த் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஷ்ரேயாஸ் ஐயர் – பஞ்சாப் கிங்ஸ் .
அர்ஷ்தீப் சிங் – பஞ்சாப் கிங்ஸ்.
ககிசோ ரபாடா – குஜராத் டைட்டன்ஸ் .
ஜோஸ் பட்லர் – குஜராத் டைட்டன்ஸ்.
மிட்செல் ஸ்டார்க் – டெல்லி கேபிட்டல்ஸ் .

























