IPL Mega Auction 2025.. ஷ்ரேயாஸ் ஐயரை குறிவைத்து தூக்கிய பஞ்சாப்.. முழு விவரம் உள்ளே!!
IPL 2025 தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இடையை அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று (நவம்பர் 24) இத்தொடருக்கான மெகா ஏலம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் இந்திய பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. இதன் மூலம் இதுவரை நடைபெற்ற IPL ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேக பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை 18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி RTM இல் தக்க வைத்துக் கொண்டது. இவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் காகிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் அணி 10.75 கோடிக்கு வாங்கியது.

























