அரிசியின் விலை தொடர்ந்து உயர்வு – பொதுமக்கள் அவதி!!
இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த மாதத்தில் அரிசி விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரிசி விலை:
இந்தியாவில் இருந்து தான் பிற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்துயாவில் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வெளிநாடுகளில் அரிசியின் மவுசு அதிகமாக இருந்தது. இதனால், அரிசியின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனிடையே, இந்தியாவிலும் பருவநிலை மாற்றத்தினால் போதுமான பயிர் சாகுபடி இல்லாமல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், உள்நாட்டிலும் அரிசி விலை உயர்த்தப்பட்டது.
தமிழக ஆசிரியர்களுக்கு ரூ. 12,000 பொங்கல் போனஸ்? வலுக்கும் கோரிக்கை!
இந்நிலையில், இந்தியாவில் தற்போது பண்டிகைக் காலம் என்பதால் அரிசியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து நாட்டிலும் அரிசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வால் பில்லியன்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.