தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கட்டுப்பாடுகள் – முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி தின விழாவை கொண்டாடுவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான காரணத்தை முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இப்பண்டிகை இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் நடத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பண்டிகை காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதித்தும், தெருக்களில் வைத்து விநாயகர் சிலைகளை வழிபடவும், அருகில் இருக்கும் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது – 5 லட்சம் பரிசுத்தொகை!
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு விதித்த தடைகளை அரசு நீக்க வேண்டும் என பாஜக கட்சியின் சார்பிலும், இந்து முன்னணி அமைப்பின் சார்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என எழுந்த கோரிக்கைக்கு பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின், ‘கொரோனா அலை தொற்றை தடுக்கு விதத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானில் ஆண், பெண்களுக்கு இடையே திரையிட்டு பல்கலை வகுப்புகள் – தலிபான்கள் ஆட்சி!
அதன் காரணமாக தான் தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை காலங்களில் விடுக்கப்பட்ட தளர்வுகளின் நிமித்தமாக கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை கவனத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது’ என விளக்கம் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து விநாயகர் சிலை செய்யும் சுமார் 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.