தமிழக அரசு சார்பில் இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது – 5 லட்சம் பரிசுத்தொகை!
தமிழகத்தில் சிறந்த இதழியலாளர்களுக்கு அரசு சார்பாக கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்விருதுடன் பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் எழுதுகோல் விருது:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததையடுத்து துறைவாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஓவ்வொரு துறை அமைச்சர்களும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மற்ற துறைகளை தொடர்ந்து இன்று செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 2021 – நிரந்தர வேலைவாய்ப்பு !
அதன்படி தமிழகத்தில் சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதழியலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் அவர்களின் படைப்புகளை பாராட்டும் வகையில் இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.
- அதனை தொடர்ந்து பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
- பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிக்கையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
- பத்திரிக்கையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைப்பு – அரசு அறிவிப்பு!
- அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும்
- அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டிடங்கள் புனரமைக்கப்படும். சென்னை, அரசு கலை அச்சகத்திற்கு சுமையூர்தி ஒன்று கொள்முதல் செய்யப்படும்.
- சென்னை அரசு கலை அச்சகத்திற்கு ஒரு காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்.