மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு.. கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்.. விவரம் உள்ளே!!
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 23) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
IPL 2025 Mega Auction: மெகா ஏலத்தை இலவசமாக ஒளிபரப்பும் ஜியோசினிமா.. முழு விவரங்கள் உள்ளே!!
இதில், குறிப்பாக மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காது’. ‘டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஆய்வுக்குகூட அனுமதி தர மாட்டோம்’. ‘மக்கள் விரும்பாத திட்டம் எதையும் தமிழ்நாடு அரசு கொண்டு வராது’ என்று தெரிவித்துள்ளார்.


























