தமிழக மின்வாரிய களப்பணியாளர்கள் கவனத்திற்கு – கழக இயக்குனர் அறிக்கை!
தமிழகத்தில் பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகளின் போது மின் விபத்துகள் மற்றும் கள பணியாளர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய மின் பகிர்மான கழக இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
மின் விபத்துகள்:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் மின் விபத்துகள் மற்றும் கள பணியாளர்கள் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை தடுக்க மின் பகிர்மான கழக இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே கல்விக்கட்டணம் வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!
அதில், கடந்த சில நாட்களாக மின் விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் பிரிவுகளில் பணிபுரியும் கள பணியாளர்கள் உயிரிழப்பு மற்றும் உடல் நல பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக நிறுவனம் சாரா மின் நுகர்வோர்களும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காதது தான் மின் விபத்து, உயிரிழப்பு முதல் தீவிர உடல் பாதிப்பு அதிகளவில் நடைபெறுகிறது.
எனவே இனிமேல் மின்சார கள பணியாளர்கள் மிக கவனத்துடன், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி மின் விபத்துகள் ஏதும் ஏற்படாமல் பணியாற்ற வேண்டும் எனவும், கள பணியாளர்கள் மற்றும் வாரியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வாரிய பணி சிறப்பாக நடைபெற வேண்டும் என தங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும் இது குறித்து மின் உபகரணங்கள் மற்றும் மின்சாரம் பயன்பாடு பாதுகாப்பாக கையாள்வது குறித்து கையேடுகள், ஊடக அளவில் விளம்பரம், பொது இடங்களில் பாதுகாப்பு விளம்பர அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மின்சார வாரிய தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.