தமிழக தனியார் பள்ளிகளில் 40% மட்டுமே கல்விக்கட்டணம் வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 75 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 40 சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடுமையாக எச்சரித்து உள்ளது
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளில் 75 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மொத்த கல்வி கட்டணத்தையும் முழுவதுமாக வசூலிக்காமல் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும் எனவும் முதல் தவணையாக 40 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணமும் செலுத்த வேண்டும் என பெற்றோர்களை வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கட்டண விவகாரம் குறித்து முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன, இந்நிலையில் புதிய கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் பல தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
தற்போது கொரோனா காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே அதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டதும் 2 மாதங்களில் வசூலிக்க வேண்டும்.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இறுதியாக 25 சதவீதம் கட்டணத்தை வசூல் செய்வது கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையில், இரண்டாவது முறையாக சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை செய்துள்ளது. கல்விகட்டணம் செலுத்த ஆகஸ்ட் 31 வரை நேரம் உள்ளது. எனவே கல்வி கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் ஆகஸ்ட் 31க்குள் 40 சதவீத கட்டணத்தை செலுத்தலாம். மீதமுள்ள கட்டணம் எப்போது வசூலிக்கப்படும் என அரசு இனிமேல் தான் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.