தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பயணிகள், நிர்வாக வசதிக்காக 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்களில் நேர மாற்றம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் ஊரடங்கின் போது பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டாலும், ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன.
சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் அனிதா சம்பத், அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் தற்போது பயணிகள், நிர்வாக வசதிக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி 9 சிறப்பு ரயில்களில் சிறிய அளவில் நேர மாற்றம் செய்து அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (எண். 02007/02869) ஜூலை 19ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்னைக்கு வரும் எனவும், புவனேஸ்வர் – சென்னை சென்ட்ரல் (02839) ரயில் ஜூலை 22ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கும், பிலாஸ்பூர் – சென்னை சென்ட்ரல் (08231) சிறப்பு ரயில் இன்று முதல் காலை 7.50 மணிக்கும் வந்தடையும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இன்று ஆலோசனை!
திருப்பதி – சென்னை சென்ட்ரல் ரயில் (06096) இன்று முதல் இரவு 10.05 மணிக்கும், மைசூர் – சென்னை சென்ட்ரல் ரயில் (06022) காலை 6.45 மணிக்கு சென்னை வரும், ஜோலார்பேட்டை – சென்னை சென்ட்ரல் ரயில் (06090) காலை 9.10 மணிக்கும் சென்னைக்கு வரும். மேலும் சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் ரயில் (06151) செப்டம்பர் 4ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கும், சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் (02269) சிறப்பு ரயில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் காலை 6.45 மணிக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.