தமிழகத்தில் பள்ளி பேருந்துகளில் இனி இது கட்டாயம் – அரசின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
பள்ளி பேருந்துகள்:
தமிழகம் முழுவதும் அதிக அளவிலான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதிலும் தனியார் பள்ளிகள் நகரை விட்டு சற்று தொலைவில் அமைந்திருப்பதால் பள்ளி வேன், பஸ் போன்ற வாகனங்கள் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் பள்ளி பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் இதுவரை பள்ளி மாணவர்கள் பலர் பள்ளி பேருந்துகளின் மூலம் ஏற்பட்ட விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால் தமிழக அரசு முன்னதாகவே பள்ளி பேருந்துகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வெளியிட்டு அவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் மூலம் ஆண்டு தோறும் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இனி புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழக அரசு தற்போது பள்ளி பேருந்துகளின் முன் மற்றும் பின் பக்கங்களில் கேமராவும், பின் பக்கத்தில் சென்சார் கருவியும் கட்டாயமாக பொறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்டதை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.