தமிழகத்தில் மொத்த காய்கறி சந்தைகள் இயங்க அனுமதி – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மொத்த காய்கறி சந்தைகள் இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காய்கறி சந்தைகள்:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் எடுத்து வருவதனால் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதனை தமிழக மக்கள் முறையாக பின்பற்றாத நிலையில் தமிழக அரசு ஊரடங்கு நடவடிக்கையை கடுமையாக்கியது. அதன்படி கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இத ஊரடங்கின் பொழுது அத்திவாசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து இந்த ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 28ம் தேதி அறிவித்தது. மேலும் தற்போதும் கடைகள் அனைத்தும் திறக்கப்பமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி அனுமதியுடன் வண்டிகளில் வைத்து காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
மாநிலங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு?மத்திய அரசு பரிந்துரை!!
இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை(மே 31)முதல் கோயம்பேடு மற்றும் இதர மாவட்டங்களில் இயங்கும் மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழங்கள் மற்றும் பூ சந்தைகள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கடைகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி வரை மட்டும் இயங்கும் என்றும் ஊரடங்கின் பொழுது நியாய விலை கடைகளும் 12 மணி வரை இயங்கும் என்றும் அறிவித்தது.
No comments