தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் கடையில் பணிபுரிய கூடாது. அவர்களை அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பணியிட மாற்றம்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 1.96 கோடி மக்கள் ரேஷன் அட்டைகளை பெற்றுள்ளனர். இவர்கள் மாதந்தோறும் அரசின் மளிகை பொருட்களை பெற்று பயனடைகின்றனர். தற்போது குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வர சொல்லும் சௌந்தர்யா, பாரதி ஏற்பாரா? இன்றைய எபிசோட்!
அதனை தொடர்ந்து பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் உணவு வழங்கல் துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மனிதவள மேலாண்மை நிபுணர்கள் மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணித்திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என தலைமை செயலாளர் முகமது நசீமுதீன் கூறினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் கடையில் பணிபுரிய கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நேற்று அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நியாய விலைக்கடை ஊழியர்கள் ஒரே கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது. அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தவிர வெளி நபர்கள் யாரும் இருக்கக் கூடாது. இதனை மீறியதாக புகார்கள் வந்தால் நியாய விலைக்கடை விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.