சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற சொல்லும் அப்பா, செய்வாரா சரவணன்? இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனின் அப்பா எல்லா பிரச்சனையும் சரியானதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார். பின் சரவணனும், சந்தியாவும் தங்களது காதலை வெளிப்படுத்துகிறார்கள். பார்வதி விக்கியை நினைத்து கனவு வந்ததாக சொல்லி சரவணா, சந்தியாவிடம் அழுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சரவணன் சந்தியாவிற்கு இடையே இருந்த பிரச்சனை சிவகாமி சரியாக புரிந்து கொண்டது எல்லாம் நினைத்து சந்தோசமாக இருப்பதாக சரவணனின் அப்பா பேசிக் கொண்டிருக்கிறார். நான் அப்பவே சொன்னேன் சந்தியாவிடம் மனம் விட்டு பேசினால் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடும் என சரவணனின் அப்பா சொல்கிறார். உடனே சரவணன் செய்த தப்பை உணர்ந்து விட்டதாக தெரிவிக்கிறார். சந்தியாவிற்கு ஏதாவது ஆசை இருந்தால் அதை கேட்டு சீக்கிரமாக அதை நிறைவேற்று என சொல்கிறார்.
பிறகு சீக்கிரமாக இருவரும் சேர்ந்து பேர குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்கிறார். பின் செந்தில் அர்ச்சனா குடும்பத்தில் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து சந்தோசமாக இருப்பதை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார். நாளைக்கு என்ன நாள் என அர்ச்சனா கேட்க, நாளைக்கு திருமண ஆர்டர் செய்ய வேண்டும் என சொல்கிறார். உடனே அர்ச்சனா கோவப்பட எல்லாம் ஞாபகம் இருக்கும் ஆனால் என் பிறந்தநாள் மட்டும் உங்களுக்கு மறந்துவிடும் என சொல்கிறார்.
உடனே செந்தில் மன்னிப்பு கேட்டு அர்ச்சனாவை நாளைக்கு படத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறேன் என சொல்கிறார். அர்ச்சனாவும் சந்தோசத்தில் இருக்கிறார். பின் சரவணனும் சந்தியாவும் ரூமிற்கு வர சரவணன் வழக்கம் போல கீழே படுக்க செல்கிறார். ஆனால் சந்தியா இவரை எப்படியாவது மேலே படுக்க சொல்ல நான் இன்னைக்கு பாய்யில் படுகிறேன் என சந்தியா சொல்கிறார். எனக்கு பாயில் படுத்தால் தான் தூக்கம் வரும் என சரவணன் சொல்ல, சந்தியா மேலே படுக்க சொல்கிறார்.
இரண்டாவது குழந்தைக்காக கோவிலில் பரிகாரம் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
இருவரும் கட்டிலில் அமர சந்தியா சரவணன் கையில் இருக்கும் காயத்தை பார்க்கிறார். அதற்கு அவர் மருந்து போட்டு விட சரவணன் சந்தியாவை அணைத்து தோளில் சாய்த்துக் கொள்கிறார். பின் சரவணன் சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மறுபக்கம் பார்வதி அவர் ரூமில் தூங்கி கொண்டிருக்க விக்கி அவளை கொலை செய்ய வருவது போல கனவு வருகிறது. உடனே பார்வதி பயந்து வந்து சரவணனை அழைக்க அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி சந்தியாவை பார்வதியுடன் தூங்க சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.