இரண்டாவது குழந்தைக்காக கோவிலில் பரிகாரம் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கோவிலில் இரண்டாவது குழந்தை கிடைக்க வேண்டும் என நினைத்து அங்கபிரதசனை செய்கிறார். அப்போது அங்கே சௌந்தர்யா வருகிறார். அந்த குழந்தை நல்லபடியாக தான் இருப்பா என சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கண்ணம்மா போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தால் என்ன நடந்திருக்கும் என சொல்லி சாந்தியிடம் பேசுகிறார். அப்போது கண்ணம்மா என்னவெல்லாம் பண்ணிருப்பா என்று எனக்கு தெரியும், இப்போ கூட ஏதாவது கோவிலில் சென்று அழுது கொண்டிருப்பார். கண்ணம்மா கோவிலுக்கு சென்று இரண்டாவது குழந்தை பற்றி சொல்லி அழுகிறார். பின் என் குழந்தை கிடைக்க என்ன வேணாலும் செய்வேன் என சொல்லி அங்கபிரதசனம் செய்கிறார்.
அப்போது சரியான நேரம் பார்த்து சௌந்தர்யா அங்கே வருகிறார். கண்ணம்மா கோவிலை சுத்தி வரும் போது, சௌந்தர்யா மீது இடித்துவிடுகிறார். சௌந்தர்யா கண் விழித்து பார்க்க, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து வருத்தப்படுகிறார். கண்ணம்மாவை எந்திருக்க சொல்ல அவர் மறுக்கிறார். அப்போது ஐயர் அங்கே வந்து இப்போது பரிகாரம் செய்யாதே நீ செய்தாலும் உனக்கு அதற்கான பலன் கிடையாது என சொல்கிறார். உடனே கண்ணம்மா எழுந்து, சௌந்தர்யாவிடம் வருத்தப்பட்டு பேசுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்து பேட்டி!
என் இரண்டாவது குழந்தை யார் என தெரிந்து கொள்ளாமல் நான் விடமாட்டேன் என சொல்ல, சௌந்தர்யா உன் குழந்தைக்கு எதுவும் ஆகாது அவள் ஒரு வீட்டில் சந்தோசமாக இருப்பாள் என சொல்ல, சௌந்தர்யா வெண்பா பற்றி சொல்ல வேண்டாம் என நினைக்கிறார். பின் அஞ்சலி வடை சுட்டு கொடுக்க வேணு ஊட்டி விடுகிறார். அப்போது சமையல் அம்மா செய்தது மட்டும் எப்படி சுவையாக இருக்கிறது என கேட்கிறார். உன் அப்பா முன்னால் அதெல்லாம் கேட்காதே என சொல்கிறார்.
அப்போது அங்கே பாரதி வர, ஹேமாவிற்கு புரை இருக்கிறது. உன்னை யாரோ நினைக்கிறார் போல என சொல்ல, என்னை சமையல் அம்மா தான் நினைப்பார் என பாரதி முன்னால் சொல்கிறார். உடனே பாரதி கோவப்பட ஹேமா சாரி கேட்கிறார். பின் சௌந்தர்யா வர கண்ணம்மாவை பற்றி வேணுவிடம் சொல்கிறார். பின் கண்ணம்மா பரிகாரம் செய்து முடியாமல் இருக்க லட்சுமி அவருக்கு உதவி செய்கிறார். கண்ணம்மா வேண்டாம் என சொல்ல, லட்சுமி கண்ணம்மா காலில் வலி மருந்து தேய்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.